tamilnadu

img

போக்குவரத்து கூட்டுறவு சங்கத் தேர்தல்: மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி

விழுப்புரம், ஜூலை 10- விழுப்புரம் மாவட்ட அரசு போக்கு வரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்திற்கான தேர்த லில் மதசார்பற்ற முற்போக்கு தொழிற்சங்க கூட்டணி வெற்றி பெற்றது. இந்த சங்கத்திற்கான தேர்தல் அறி விக்கப்பட்ட நாள்முதல் தேர்தல் அதிகாரி யான ஜெயபாலன் ஒருதலைப்பட்சமாகவே செயல்பட்டு வந்ததாக சங்க உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். ஒருகட்டத்தில் வேட்பா ளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து வேட்பா ளர் பட்டியல் ஒட்டப்பட்டு எட்டு இயக்கு னர்களுக்கான தேர்தல் திங்களன்று நடை பெற்றது. இதில் தொமுச, சிஐடியு, விசிக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு தொழிற்  சங்கங்கள் ஒரு அணியாகவும், ஆளும் அதி முகவின் அண்ணா தொழிற்சங்கம் ஒரு அணி யாகவும் போட்டியிட்டன. மொத்தமுள்ள 630 உறுப்பினர்களில் 511  பேர் வாக்களித்தனர். இதில் தொமுச, சிஐ டியு, விசிக ஆகிய தொழிற்சங்கங்களின் சார்பில் போட்டியிட்ட 6 பேர் வெற்றி பெற்ற னர். அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட இரண்டு பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணியினர் போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு வரும் 13ஆம் தேதி  தேர்தல் நடைபெற உள்ளது.