tamilnadu

ஈ.சி.ஆர் சாலையை அகலப்படுத்த 5 ஆயிரம் மரங்களை வெட்ட திட்டம்

சென்னை, நவ. 16- மாமல்லபுரம்-மரக்கா ணம் வரை கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்த 5  ஆயிரம் மரங்களை வெட்டப்  படுகின்றன. மாமல்லபுரத்தில் இருந்து மரக்காணம் வர  62 கி.மீ. தூரத்தக்கு கிழக்கு  கடற்கரை சாலை அகலப் படுத்தப்படுகிறது.அதற்கான திட்டத்தை தேசிய நெடுஞ் சாலை ஆணையம் வகுத்  துள்ளது. இங்கு 4 வழி, 6  வழி மற்றும் 8 வழிச்சாலை களாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக ரூ.1802 கோடி  திட்ட மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. நில ஆர்ஜிதம், கட்டுமான பணி உள்ளிட்ட செலவு பணிகள் இதில் அடங்கும். கிழக்கு கடற்கரை  சாலையில் பல இடங்களில் வளைவுகள் உள்ளன. இத னால் அடிக்கடி விபத்துகளும்  அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதை தடுக்கவே இந்த  சாலை அகலப்படுத்தப்படு கிறது. இந்த சாலையில் 6  பெரிய பாலங்கள், 9 சிறிய  பாலங்கள், 14 சுரங்க பாலங் கள், இலகு ரக வாகனங்கள் கடந்து செல்ல வசதியாக 8  சுரங்க பாலங்கள், 2 சுங்க கட்ட ணம் செலுத்தும் மையங்கள்,  34 பேருந்து நிழற்குடைகள், 2 லாரி நிறுத்தும் இடங்கள்  மற்றும் ஒரு பேருந்து நிறுத்து மிடம் அமைக்கப்படுகிறது. இந்த சாலை விரிவாக்  கத்துக்கு கிழக்கு கடற்சாலை யில் நன்கு வளர்ந்துள்ள 5  ஆயிரம் மரங்கள் வெட்டப் படுகின்றன. முதற்கட்டமாக மாமல்லபுரத்தில் இருந்து முகையூர் வரை சாலை அகலப்படுத்தப்படுகிறது. அங்கு 3,319 மரங்கள் வெட்டப்  படுகின்றன. 2-வது கட்டமாக முகை யூரில் இருந்து மரக்காணம்  வரை சாலை அகலப்படுத் தப்படுகிறது. இப்பகுதியில் 1,560 மரங்கள் வெட்டப் படுகின்றன. இவற்றில் 637 சதுப்பு நில மரங்களும் வெட்டப்பட உள்ளன. இந்த  சாலையை அகலப்படுத்த கடற்கரை ஒழுங்கு மண்ட லத்துக்கு மத்திய சுற்று சூழல்  அமைச்சகத்தின் மதிப்பீடு நிபுணர் குழு பரிந்துரை செய்  துள்ளது.