சென்னை,ஜூலை 12- தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராம பகுதியில் நாளொன் றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலை ரூ. 634 கோடியில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் வெள்ளியன்று(ஜூலை 12) கேள்வி நேரம் முடிந்த பிறகு, பேரவை விதி 110-யின் கீழ் அறிக்கை ஒன்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளி யிட்டார். அதன் விவரம் வருமாறு:- தமிழ்நாட்டில் தொழில் முத லீட்டாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப 20 ஏக்கர் அல்லது அதற்கு மேலாக நிலம் அளிக்க விரும்பும் தனியார் நில உரிமையாளர்க ளுடன் தொழில் முனைவோர் களை இணைக்கும் பாலமாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘வலைதள’ உருவாக்கப்படும். “தொழில் தோழன்”என்ற தொழில் நிறுவனங்களுக்கான ஒருங்கி ணைந்த இணைய அடிப்படையிலான குறைதீர் வழிமுறை ரூ. 50 லட்சத்தில் ஏற் படுத்தப்படும். அதிகபட்சமாக 4 வாரங்களுக்குள் அப்புகார் மீது நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும்.
தொழிற் கூடங்கள்...
ஏற்றுமதிக்கான உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்தி உடனடியாக தொழில் துவங்கு வதற்கு ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகால் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந் துறை சிப்காட் பூங்காக்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய தொழிற் கூட கட்டடங்கள், தலா ரூ. 50 கோடியில் ஏற்படுத்தப்ப டும். சிறு,குறு நிறுவனங்கள் தங்க ளது உற்பத்தித் திறனை மேம் படுத்தவும், தொழில்களை விரிவு படுத்தவும், லாபகரமாக தொழில் களை தொடரவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் தற்பொழுது வழங்கப் பட்டு வரும் 3 விழுக்காடு வட்டி மானியம் 6 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும். கோவையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் இடத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, தகவல் தொழில்நுட்ப மையத்தின் அருகில் உள்ள 9 ஏக்கர் நிலத்தில் சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கூடுதலாக ஒரு தொழில்நுட்ப வளாகம் ரூ. 200 கோடியில் கட்டப்படும். திருப்பெரும்புதூரில் வான்வெளி மற்றும் பாதுகாப்புப் பூங்காவில் நிறுவப்பட உள்ள உயர் கணினி மற்றும் பொறியி யல் வடிவமைப்பு மையத்தில் புதுமை கண்டு பிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோருக் கான சிறப்பு மையம், ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் சுமார் ரூ. 100 கோடியில் நிறுவப்படும்.
தொழிற் பயிற்சி நிலையங்கள்....
பொதுத்துறை நிறுவனங்க ளான பவர்கிரிட் கார்ப்பரேஷ னும் பாரத் பெட்ரோலியமும் இணைந்து சமூக பங்களிப்புடன் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும் பாக்கம், நாகை மாவட்டம் செம்போடை ஆகிய இரண்டு இடங்களில் புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் ரூ. 26 கோடி செலவில் துவக்கப்படும். இளைஞர்கள் வேலை வாய்ப்பு அதிகமுள்ள தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெற ஏது வாக, அம்பத்தூர், செங்கல் பட்டு, திருச்சி, கடலூர், பெரம்ப லூர், கோவை, சேலம், திண் டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங் களில் நீண்ட கால மற்றும் குறுகிய கால புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்படும். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பங்களில் ஒன்றான நம்பிக்கை இணையம் மூலம் பரிவர்த்தனைகளில் உள்ள உண்மைத் தன்மையினை அறிந்திடும் வகையில், தமிழ் நாடு மின்னாளுமை முகமை யால் சுமார் 40.80 கோடி ரூபாய் செலவில் நம்பிக்கை இணைய கட்டமைப்பு ஒன்று அமைக்கப் படும். அரசுத் துறையில் பல்வேறு சேவைகளைப் பெற பொது மக்கள் அத்துறை சார்ந்த அலு வலகங்களுக்குச் சென்று விண்ணப்பித்து பெறுவது மட்டு மல்லாமல், அரசு இசேவை மையங்கள் இணையதளம் மற்றும் கைபேசி செயலி வாயி லாகவும் விண்ணப்பித்து பெற்று வருகின்றனர். தமிழ்நாடு மின்னா ளுமை முகமையால் “மக்கள் எண்” உருவாக்கப்பட்டுள்ளது. “மக்களைத் தேடி அரசு” என்ற இந்தத் திட்டம் 90 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.