tamilnadu

img

திருத்தணி செங்கல்பட்டு சாலை விரிவாக்கம்: காஞ்சிபுர சாலையோர மக்கள் பாதிப்பு

காஞ்சிபுரம், ஜூன் 23- தமிழகத்தில் மொத்தம் 15 சாலைகளை விரிவுபடுத்தி சென்னை - கன்னியாகுமரி சாலை யுடன் இணைக்கப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் வழியாகச் செல்லும் திருத்தணி - செங்கல்பட்டு  சாலை 83 கிலோ மீட்டர் தூரத்துக்கு விரிவுபடுத்தப்பட வுள்ளது. தற்போது செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை 7 மீட்டர் அகலம் உள்ளது. இந்தச் சாலைக்கு இணையாக நடுவில் தடுப்புக் கட்டை அமைத்து மற்றொரு 7 மீட்டர் அகலம் உள்ள சாலை போடப்பட்டு 4 வழிப் பாதையாக மாற்றப்படுகிறது. இதேபோல் காஞ்சிபுரம் - திருத்தணி சாலை ஒலிமுகமது பேட்டை பகுதியிலிருந்து திருத்தணி வரை தற்போது 7 மீட்டர் அகலம் உள்ளது. இந்தச் சாலை மேலும் 3 மீட்டர் அகலப்படுத்தி 10 மீட்டர் அகலம் உள்ள சாலையாக மாற்றப்படவுள்ளது. காஞ்சிபுரம்  திம்ம சமுத்திரம் ரயில்வே கேட் பகுதிகளில் அளவீடு செய்யப்பட்டு வீடுகளில் எத்தனை அடி நீளத்திற்கு கையகப்படுத்தப்படவுள்ளது என குறிப்பிடபட்டுள்ளது.

 இந்தச் சாலை விரிவாக்கத்து க்காக காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் கூடுதலாக 7 மீட்டர் அகலமுள்ள இடமும், காஞ்சிபுரம்-திருத்தணி மார்க்கத்தில் கூடுலாக 3 மீட்டர் அகலமுள்ள இடமும் தேவைப்படும். இதற்காக சுமார் 100 ஏக்கர் அளவுள்ள இடங்களை கையகப்படுத்தினாலே போது மானது. ஆனால் 200 ஏக்கர் அளவுக்கான இடங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை களில் அலுவலர்கள் ஈடுபட்டு வருவ தாகவும், இந்த நடவடிக்கையால் சாலையோரம் இருக்கும் பொது மக்கள் தாங்கள் பாதிக்கப்படு வதாகவும் கூறுகின்றனர். காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதி யில் அளவீடு செய்யப்பட்டுள்ளது குறித்து மக்கள் கூறுகையில், பொன்னேரி கரை புதிய மேம்பாலம் வழியாக அய்யம்பேட்டை வரை சாலை விரிவாக்கம் செய்து செங்கல்பட்டு சாலையில் கொண்டு சென்று இணைக்கலாம்.

ஆனால், தேவையில்லாமல் இப்பகுதியில் அளவீடு செய்யப்பட்டு எங்களை துன்பப்படுத்துகிறார்கள்’ என்கின்றனர். காஞ்சிபுரம் - திருத்தணி சாலையில் விரிவாக்கத்துக்கு தேவையான 3 மீட்டர் அகலத்திற்கு, பதிலாக சுமார் 6 மீட்டர் அகலத்திற்கு இடங்கள் அளக்கப்படுவதாகவும் மக்கள் கூறுகிறார்கள். இந்தச் சாலை குறித்தும், நிலங்கள் கூடுதலாக கையகப்படுத்து வது பற்றியும் அதிகாரிகளிடம், கேட்ட போது காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலை மட்டுமே 4 வழிப் பாதையாக மாற்றப்படவுள்ளது. இந்தச் சாலைக்கு நடுவில் தடுப்புக் கட்டை கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு சற்று கூடுதலாக இடம் தேவைப்படும். காஞ்சிபுரம் - திருத்தணி சாலை 7 மீட்டரிலிருந்து 10 மீட்டர் அகலமுள்ள சாலையாக மட்டுமே விரிவாக்கம் செய்யப்பட வுள்ளது. தற்போது ஆரம்ப கட்ட அளவீட்டுப் பணிகள் மட்டுமே நடை பெற்று வருகின்றன. பொது மக்களுக்கு அதிக பாதிப்பு இல்லாத வகையிலும், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கியும் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.