வேலூர், ஜூலை 9- வேலூர் மாநராட்சி சாலைகளில் அதிகளவில் மாடுகள் நடமாடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். இந்நிலையில் செவ்வாயன்று (ஜூலை 9) காலை ஆந்திர மாநிலம் சித்தூர் நகரிலிருந்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு ஆட்டோவில் வந்தனர். அப்போது பாலாற்று பழைய மேம்பாலத்தில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து, அதில் பயணம் செய்த கணவர், மனைவி மற்றும் குழந்தை உட்பட மூவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் சாலையில் திரியும் மாடுகளை அறிந்து, மாட்டு உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை. இதனால், சாலைகளில் சுதந்திரமாக சுற்றித் திரிவதால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது என்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பார்களா?.