சென்னை, நவ. 14- மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்களை கைது செய்ய வலி யுறுத்தி வியாழனன்று (நவ.14) சென்னை ஐஐடி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டம் நடத்தினர். சென்னை ஐஐடி-யில் கடந்த 10 ஆண்டுகளில் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 5 பேர் வரை தற்கொலை செய்து மாண்டுள்ளனர். இதில் ஒரு பேராசிரியரின் தற்கொலை யும் அடங்கும். ஆனால் இது குறித்து எந்தவொரு முறையான விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கவில்லை. இந்நிலையில் சமூகவியல் துறையில் பயிலும் முதுகலை மாணவி பாத்திமா லத்தீப் அண் மையில் தற்கொலை செய்து கொண்டு மாண்டுள்ளார். அவர் தனது செல்போனில் தமது தற் கொலைக்கு காரணமான 3 பேரா சிரியர்களின் பெயரை குறிப் பிட்டுள்ளார். இந்நிலையில் தற் கொலைக்கு தூண்டிய ஆசிரியர் களை கைது செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்போராட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், “ஆர்எஸ்எஸ் சிந்தனையுள்ள ஆசிரியர்கள் மூல மாக மத்திய பல்கலைக் கழகங்க ளில் பயிலும் தலித் மற்றும் இஸ்லா மிய மாணவர்கள் மீது பாஜக தாக்குதல் நடத்தி வருகிறது. ரோகித் வெமூலா-வை போன்றே பாத்திமாவை கல்வி வளாகப் படு கொலை செய்துள்ளது” என்றார். “பேரா.சுதர்சன் பத்மநாபன் மாணவி பாத்திமாவை 28 நாட்க ளாக மத ரீதியாக, உளவியல் ரீதி யாக துன்புறுத்தியுள்ளார். அதன் காரணமாக பாத்திமா தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த கல்வி வளாகப் படுகொலை குறித்த வழக்கை தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் பதிவு செய்ய வேண்டும். பேராசிரியர் கள் மீது துறை ரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார். “கல்வி நிலையங்கள் கொலைக் கூடாரமாக மாறுவதை தடுக்க வேண்டும். தற்கொலை களை தடுக்கவும், எஸ்சி, எஸ்டி, சிறுபான்மை மாணவர்கள் மீதான பாகுபாட்டை தடுக்கவும் குழுக் களை அமைக்க வேண்டும், தமி ழகம் முழுவதும் நடைபெறும் கல்வி வளாகக் கொலைகளை தடுக்க தமிழக அரசு குழுக்களை அமைக்க வேண்டும்” என்றும் மாரியப்பன் வலியுறுத்தினார். இப்போராட்டத்தில் சங் கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.