தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் சங்கத்தினர் ஊர்வலம்
ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும், திறன்மிகு உதவியாளர் என்ற பெயரை மீண்டும் சாலை ஆய்வாளர் என்று மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (பிப்.24) சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் அலுவலகத்தில் தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் சங்கத்தினர் ஊர்வலமாக வந்து மனு அளித்தனர். சங்கத்தின் தலைவர் ஏ.சுரேஷ், பொதுச்செயலாளர் டி.திருமுருகன், பொருளாளர் வி.செல்வராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
