திருவொற்றியூர், ஜூலை 12- எண்ணூர் அனல் மின் ஊழியர் குடியிருப்பில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எண்ணூர் அனல்மின் நிலைய குடியிருப்பில் போதிய அடிப்படை வசதி கள் இல்லை என்று மின் ஊழி யர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள கழிவுநீர் அகற்றும் மோட்டர் பழுதடைந்து விட்டது. இத னால் குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவு நீரை அகற்று வதில்லை. தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மின் ஊழியர்களிடம் வாட கையாக 8 ஆயிரம் ரூபாய் வரை நிர்வாகம் பிடித்தம் செய்கிறது. ஆனால், அடிப் படை வசதிகளை செய்துதர மறுக்கிறது. குடியிருப்பு களின் ஜன்னல், கதவுகள் உடைந்த நிலையில் உள்ளன. ஆங்காங்கே புதர் மண்டி கிடக்கின்றன. இதனால், கொசு தொல்லை அதிக ரித்து, ஊழியர்களும் அவர் களது குடும்பத்தினரும் நிம் மதியற்று தவிக்கின்றனர். குடியிருப்பு பரா மாரிப்பு பணிகளை முறை யாக நிதி ஒதுக்கி செய்வ தில்லை. எனவே, ஊழியர்க ளின் பிரச்சனையில், அனல் மின் நிலைய நிர்வாகம் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அங்குள்ள மின் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.