காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் உள்ள பள்ளி, கல்லூரி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், ஓட்டுனர்களின் அனுபவம், வாகனத்தின் முதலுதவிப் பெட்டி, தீயணைப்பு கருவிகள், வாகனத்தின் தரம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர் பிரபாகரன், மோட்டர் வாகன ஆய்வாளர் கருப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.