வேலூர், மார்ச் 7- தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவி யாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வேலூரில் மாநிலத் தலைவர் ராஜசேகர் தலை மையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் எஸ்.தமிழ்ச் செல்வன், மாநிலத் துணைத் தலைவர்கள் இரா.வெயிலுமுத்து, எஸ்.மோகன், ஏசி. வின்சென்ட் யாகோப், மாநிலச் செயலாளர் கள் கணேசன், கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ் கண்ணன், மாவட்டத் தலை வர் க.சரவணராஜ், அரசு சுகாதார போக்கு வரத்துறை ஊழியர் சங்க மாநிலப் பொரு ளாளர் ப.ராஜாமணி, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் கோ. மோகனமூர்த்தி ஆகியோர் பேசினர். வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாள ருக்கு இணையான அடிப்படை ஊதியம் ரூபாய் 15,700 வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பணிக் காலத்தை பத்தாண்டு என்பதை 5 ஆண்டு களாக குறைக்கவேண்டும், 1995ஆம் ஆண் டுக்கு முன்புள்ள கிராம உதவியாளரின் பணிக்காலத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 25 அன்று அனைத்து மாவட்ட தலைநக ரங்களிலும் மாலை நேர தர்ணா நடத்துவது என்றும், மாநில மாநாட்டை மதுரையில் நடத்து வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.