ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், தில்லி ஜெஎன்யு பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதை கைவிடடு, கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வியாழனன்று (நவ.21) சாஸ்திரிபவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கார்த்திஸ்குமார், சரவணதமிழன், மஞ்சுளா (வடசென்னை), ப.ஆறுமுகம், சுசீந்திரா (தென்சென்னை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.