சென்னை, ஜூலை 11- தமிழக சட்டப்பேரவையில் வியாழ னன்று கேள்வி நேரத்திற்கு பிறகு, தமிழ்நாட்டில் கொப்பரை தேங்காயின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டி யதன் அவசியம் குறித்து சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெய ராமன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, “தமிழ் நாட்டில் 9 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. சுமார் 470 கோடியே 70 லட்சம் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு அறிவித்தி ருக்கும் ஆதார விலையை வழங்குவதுடன் கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய் மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பதிலளித்த வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, “மத்திய அரசு நடப்பாண்டு அறிவித்த குறைந்த பட்ச ஆத ரவு விலையான பந்து கொப்பரைக்கு கிலோ வுக்கு 99 ரூபாய் 20 பைசாவும், அரவைக் கொப்பரைக்கு 95 ரூபாய் 20 பைசா வழங்க வும் மாநில அரசு முன் வந்துள்ளது. இந்த கொள்முதல் பணி அடுத்த ஆறு மாதங்க ளுக்கு நடைபெறும் என்றும் கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய் 20 பைசாவாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பிரத மருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி யிருப்பதாகவும் தெரிவித்தார்.