tamilnadu

img

பள்ளியில் விஷ வாயுக் கசிவு - மாணவர்கள் வெளியேற்றம்

சென்னை,அக்டோபர்.23- சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் விஷ வாயு வெளியேறி மாணவர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் உள்ள விக்டோரி என்ற தனியார் பள்ளியில் திடீரென விஷ வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் முதலில் 3 மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர். பிறகு 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முதற்கட்ட விசாரணையில் பள்ளி ஆய்வகத்திலிருந்து விஷ வாயு வெளியாகவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.