மக்களின் தலைவராக உயர்ந்து நிற்கிறார் தோழர் ஆர்.நல்லகண்ணுக்கு என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவராக விளங்கிய தோழர் ஆர்.நல்லகண்ணுவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. எளிமை மற்றும் உறுதிப்பாட்டின் நற்பண்புகளை உள்ளடக்கிய ஒரு முன்மாதிரியான வாழ்க்கையை அவர் வாழ்ந்து காட்டினார். அசைக்க முடியாத போராட்ட மனப்பான்மையுடன், அவர் மக்களின் தலைவராக உயர்ந்து நின்றார்.
சிறந்த எதிர்காலத்தை அடைய ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்களின் பாதையைப் பின்பற்ற நம்மைத் தூண்டும் வகையில் தோழர் ஆர்.என்.கே ஒரு புகழ்பெற்ற மரபை விட்டுச் சென்றுள்ளார். அவரது நினைவுகள் நம்மை முன்னோக்கி வழிநடத்தும். வீர வணக்கம் தோழரே!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
