tamilnadu

img

மாவட்ட நீதிபதிகளுக்கான முதல்நிலை தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை

மாவட்ட நீதிபதிகளுக்கான முதல்நிலை தேர்வில் தேர்வு எழுதிய 3,562 பேர்களில், ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில், 31 மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வு தொடர்பான அறிவிப்பாணை, கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 7-ம் தேதி நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில், கீழமை நீதிமன்ற நீதிபதிகள், சிவில் மற்றும் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என 3,562 பேர் தேர்வு எழுதினர் . இதில் முதல்நிலைத் தேர்வு மற்றும் பிரதானத் தேர்வைச் சேர்த்து மொத்தம் 300 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும். இதில் முதல்நிலைத் தேர்வில், பொதுப்பிரிவினருக்கு 60 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 52.5 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 45 மதிப்பெண்களும், தேர்ச்சி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் புதனன்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்வு எழுதிய நீதிபதிகளில் ஒருவர் கூட தேர்ச்சி அடையவில்லை. 

மேலும் தேர்வெழுதியவர்களில் 95 சதவீதம் பேர் மைனஸ் மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். இதனால், இம்மாத 25 மற்றும் 26 தேதிகளில், நடைபெறவுள்ள பிரதானத் தேர்வில், ஒருவர் கூட பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது