tamilnadu

கூவம், அடையாறில் கழிவு நீர் கலப்பதை தடுக்க புதிய திட்டம்

சென்னை, ஜூலை 11- சென்னை கூவம், அடையாறு நதிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் விதி  எண் 110-ன் கீழ் நகராட்சி நிர்வாகம்,  குடிநீர் வழங்கல் துறை, சத்துணவு  மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைகள் சம்பந்தமாக சில அறிவிப்புகளை வெளியிட்ட முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் அடையாறு, கூவம் நதிகளுக்கான சுற்றுச்சூழல் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் பிரதான நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை இடைமறித்தல், மாற்று வழிகளை அமைத்தல், இடத்திற் கேற்ப ஆங்காங்கே கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையங்கள் அமைத்தல்,  கழிவு நீர் உந்து நிலையங்கள் அமைத்தல், தற்போதுள்ள சென்னை கழிவுநீர் உட்கட்ட மைப்புகளை புதுப்பித்தல், வலுப்ப டுத்துதல் போன்ற பணிகளை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 2,371 கோடியிலான இந்த திட்டம் 2019 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்தப்படும்” என்றார். நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்க வும் நீர்வழங்கல் ஆதாரங்களை அதிகரிப்பதற்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வுகளை கண்டறி வதற்கும் 260 மில்லியன் லிட்டர் கழிவு நீரை மூன்றாம் நிலை சுத்திக ரிப்பின் மூலம் சுத்திகரித்து மறு  பயன்பாட்டுக்காக சென்னை, அதனை சுற்றி உள்ள நீர்நிலை களில் விடுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்
கோவை மாநகராட்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  போக்குவரத்து நெரிசலை தவிர்க்க  வெள்ளலூரில் 21.6 2 ஏக்கர் நிலத்தில்  ரூ.178.26 கோடி செலவில் ஒருங்கி ணைந்த நவீன பேருந்து நிலையம் நடப்பாண்டில் கட்டிமுடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். தர்மபுரி, நாமக்கல், இராமநாதபுரம், சேலம், திருவண்ணாமலை, திரு வாரூர், விருதுநகர் ஆகிய 7 மாவட் டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள் 6.51 கோடி செலவில்  விரிவுபடுத்தப்படும். 1133 அங்கன் வாடி மையக் கட்டடங்கள் தலா ரூ. 2 லட்சம் செலவில் சீரமைத்துக் கொடுக்கப்படும் என்றும் முதல மைச்சர் அறிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை
மனவளர்ச்சி குன்றியோர், கடு மையாக தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகையுடன் கூடுதலாக 1000 ரூபாய் வழங்கப்படும். தசைச்  சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கான பகல் நேர பராமரிப்பு  மையங்கள் மேலும் 10 மாவட்டங்க ளில் தொடங்கப்படும். மாற்றுத்திற னாளிகள் ஆவின் நிறுவனத்திட மிருந்து பொருட்களை கொள் முதல் செய்வதற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் முன்பணத் தொகை 25,000 ரூபாயுடன் மானிய  மாக ரூ.25000 வழங்கப்படும் என் றும் முதலமைச்சர் தெரிவித்தார்.