tamilnadu

img

முத்துச்செழியன் தொழிற்சங்கப்பணி அ.சவுந்தரராசன் பாராட்டு

சென்னை,செப்.8 வடபழனி, திநகர் பணி மனைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற முத்துச்செழி யன் தொழிற்சங்க பணியை சிஐடியு தலைவர் அ.சவுந்த ரராசன் பாராட்டினர். சென்னையில் நடை பெற்ற அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சம்மேளன பேரவைக்கூட்டத்தில் பேசிய அவர், தொழிலாளர்களின் நலனுக்காக அளப்பறிய பணி யாற்றிவர்  முத்துச்செழியன், ஒப்பந்தமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடியவர் என்றார்.  போக்குவரத்து தொழி லாளர்களின் விபத்து காலத்தின்போது முதற்கரம் நீட்டும் பண்பாளர், பெரிய அளவில் கல்வித்தகுதி பெறமுடியாமல் போனாலும் வாழ்க்கைப்பாடத்தை நன்கு கற்றுத்தேர்ந்தவர், தொழி லாளர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர், எளிய வாழ்க்கைமுறைக்கு சொந்தக்காரர், நல்ல தொழிற்சங்கத்தலைவர், நல்ல குடும்பத்தலைவர் என்பதை அனைவருக்கும் உணர்த்தி முன் உதாரணமாக திகழ்கிறார். இன்றளவும் அவரது குடும்பம் நம் சங்கத்தோடு இணைந்து செயல்பட்டுவருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் சவுந்தரராசன். தொழிலாளர்களின் அன்பால் வழங்கப்பட்ட ரூ 50 ஆயிரத்தையும் நினைவுப் பரிசையும் முத்துச்செழிய னின் குடும்பத்தினரிடம் அ.சவுந்தரராசன் வழங்கி னார்.