ஜிகேஎம் காலனி குளக்கரை பூங்கா அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் அமைந்துள்ள குளக்கரை பூங்காவை சனிக்கிழமை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கேசேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கௌஷிக், மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் நாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
