tamilnadu

நாட்டுக்காக ஓடிய மில்கா சிங்கின் கால்கள் ஓய்ந்தன: முதல்வர் இரங்கல்...

சென்னை:
இந்தியாவின் முன்னாள் தடகள வீரர்மில்கா சிங் மறைவுக்கு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பை சேர்ந்த மில்கா சிங், 1960இம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 4ஆம் இடத்தை பிடித்து நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டார். பதக் கத்தை தவறவிட்டிருந்தாலும், இந்திய மக்களின் மனங்களில் இடம்பிடித்தார். 'பறக்கும் மனிதன்' என்று கொண்டாடப் பட்ட மில்கா சிங் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 4 முறை தங்கப்பதக்கம் வென்றவர். காமன்வெல்த் போட்டிகளிலும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றவர்.91 வயதான மில்கா சிங் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன் தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் கொரோனாவால் பாதிக் கப்பட்டிருந்த நிலையில், அவர் கொரோனாவால் உயிரிழந்தார்.இந்நிலையில், கொரோனாவால் சிகிச்சை பெற்றுவந்த மில்கா சிங், சிகிச்சை பலனின்றி ஜூன் 18 வெள்ளியன்று  இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார். மில்கா சிங்கின் மறைவிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள் ளிட்ட தேசிய தலைவர்கள் மற்றும் விளையாட்டு, சினிமா பிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் அறிக்கையில், "இந்தியாவின் தலை சிறந்த தடகள வீரர்களில் ஒருவரும் 'பறக்கும் சீக்கியர்' என்று அழைக்கப்படுபவருமான மில்கா சிங் மறைவுச்செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். சோதனைகளை வென்று சாதனை படைத்த அவரது வாழ்வு மேலும் பல இளம் இந்தியர்களைச் சாதிக்கத் தூண்டட்டும்" என்று தெரிவித்துள்ளார்