கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பொது முடக்கம் அமல்படுத்தியதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் புதுவை சண்டே மார்க்கெட் வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், தனி மனித இடைவெளியை கடைபிடித்து சண்டே மார்க்கெட் இயங்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் வயிற்றில் ஈரத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிறப்பு தலைவர் பிரபுராஜ், அழகர்ராஜ், வடிவேலு, வீரமணிகண்டன், சேவியர், அன்பழகன், சுரேஷ், ஸ்டெல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.