tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

அம்பேத்கர் படத்தை நீக்க வேண்டும் எனும் சென்னை உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்ம காந்தி மற்றும் திருவள்ளுவர் படங்களை
தவிர மற்றவர்களின் படங்களை வைக்கக்கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இதை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஐகோர்ட் அறிவுறுத்தலில், சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் படம் இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.  

மேலும், அனைத்து நீதிமன்றங்களிலும் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி, கையில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.