tamilnadu

ஆபத்தாக இருக்கும் சென்னை விமான நிலைய ஓடுதளம்

 சென்னை, ஜூலை 10 - கடந்த 2 மற்றும் 3-ம் தேதி களில் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை இயக்குனரகமான டிஜிசிஏ  சென்னை விமானநிலைய த்தில் சிறப்புத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தது.  அப்போது ஓடுதள த்துக்கு அருகே வெள்ளத் தடுப்புக்காக மேம்படுத்தப் பட்ட மழைநீர்வடிகால் திறந்திருந்ததும், டேக்ஸி வே நீட்டிப்பு மற்றும் புதிய விமான நிலையக் கட்டு மானப் பணிகளால் ஏற்பட்ட மண், கற்கள் போன்றவை ஓடுதளத்தில் கிடந்ததாகவும் டிஜிசிஏ தரப்பில் கூறப்படு கிறது. மேலும் இரு ஓடு தளங்களுக்கும் இடையி லான பாதையில் விமானச் சக்கரங்களில் இருந்து வெளி யான ரப்பர் கழிவுகள் சரிவர அகற்றப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இது விமானங்கள் ஓடுதளத்தை விட்டு சறுக்கிச் செல்லக் கூடிய ஆபத்தையும், விமா னம் புறப்படும் போது கழிவு கள் உள்ளிழுக்கப்பட்டு எஞ் சினில் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.