என்சிசி புதுச்சேரி அணியினருக்கு துணை நிலை ஆளுநர் பாராட்டு
தில்லி குடியரசுதின தேசிய முகாமில் சிறப்பாக செயல்பட்டு பரிசுகளை வென்ற தேசிய மாணவர் படை புதுச்சேரி குழுமத்தின் வீரர்களை யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் கே கைலாஷ்நாதன் திங்களகிழமை (மார்ச் 3)ராஜ் நிவாஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கவுரவித்தார். என்சிசி இயக்குநரகத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் துணை தலைமை இயக்குநர் கமோடோர் எஸ் ராகவ், புதுச்சேரி என்சிசி குழுமத் தலைமையகத்தின் பொறுப்பாளர் குரூப் கமாண்டர் கர்னல் என். வாசுதேவன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டரங்கம் கட்டுமானப் பணிகள் ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தனது அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.