tamilnadu

கண்டெய்னர் லாரி மோதி தொழிலாளி பலி

செங்குன்றம், மே 9-சோழவரத்தை அடுத்த நெற்குன்றம் பள்ள சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (42). கூலி தொழிலாளி. இவர் புதனன்று இரவு காரனோடை பஜாரில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களைவாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.அப்போது அந்த சாலையில் கனரக வாகனமான கண்டெய்னர் லாரி அதி வேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஏழுமலை பரிதாபமாக உயிர் இழந்தார்.