பூந்தமல்லி, ஜூன் 8- மாங்காடு அடுத்த முகலி வாக்கம் லட்சுமி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரகாஷ். தி.நகரில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வெள்ளியன்று மாலை வீட்டை பூட்டி விட்டு நந்தன த்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பிய போது முன்பக்க கீரில் கேட் மற்றும் மரகதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சிய டைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 80 ஆயிரம் கொள்ளை அடிக்க ப்பட்டது தெரியவந்தது.இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.