சென்னை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், கரூர் ஆகிய ஊர்களில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தென் மாத்தூர் கிராமத்தில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலை அறிவியல் கல்லூரி, ஜீவா வேலு இண்டர்நேஷனல் பள்ளி, குமரன் பாலிடெக்னிக், அருணை கிரானைட் உள்ளிட்ட 16 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, கோயம்புத்தூர், கரூர் ஆகிய ஊர்களில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமானவரித் துறையினர் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.