tamilnadu

img

மூடப்பட்ட பஞ்சாலைகளை உடனடியாக இயக்கிடுக

மூடப்பட்ட பஞ்சாலைகளை உடனடியாக இயக்கிடுக

மில் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

கோவை, ஜூன் 22- மூடப்பட்ட தேசிய பஞ்சாலைக் கழகத்திற்கு சொந்தமான ஆலைகளை  உடனடியாக இயக்க வேண்டும், சிஐ டியு மில் தொழிலாளர் சங்கம் வலியுறுத் தியுள்ளது. கோவை மாவட்ட மில் தொழிலா ளர் சங்கத்தின், தலைமை சங்க ஆண் டுப் பேரவை, காட்டூர், அனுப்பர் பாளையத்திலுள்ள சங்கத்தின் அலுவ லகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சி.பிரான்சிஸ் சேவி யர் தலைமை வகித்தார். துணைத்தலை வர் ஆர்.ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட துணைச்செயலாளர் பி. ராஜேந்திரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி துவக்கவுரை யாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், பொருளா ளர் எம்.ஆனந்தகுமார் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். இக்கூட்டத்தில், மூடப்பட்ட தேசிய பஞ்சாலைக்கழகத்திற்கு சொந்தமான ஆலைகளை உடனடியாக இயக்கி, தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். கடந்த 7 மாதங்களாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஊதியத்தினை உட னடியாக வழங்க வேண்டும். வருங்கால  வைப்பு நிதி, இஎஸ்ஐ நிறுவனங்க ளுக்கு செலுத்த வேண்டிய தொகை களை நிலுவையின்றி செலுத்த வேண் டும். பஞ்சாலைத் தொழிலாளர்களுக் கான குறைந்தபட்ச கூலி நிர்ணயம்  செய்ய அமைக்கப்பட்ட குழுவின் பத விக்காலம் காலாவதியாகிவிட்டதால்,  புதிய குழுவினை நிர்ணயம் செய்ய வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. இதைத்தொ டர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவ ராக பிரான்சிஸ் சேவியர், செயலாளராக சி.பத்மநாபன், பொருளாளராக எம்.ஆனந்தகுமார் உள்ளிட்ட 14 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய் யப்பட்டது. முடிவில், துணைச்செயலா ளர் ஆதிலிங்கம் நன்றி கூறினார்.