குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
காஞ்சிபுரம், நவ. 22 - அரசு அறிவித்து கட்டப்படாமல் உள்ள 5 தடுப்பணைகளை விரைந்து கட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கள் வலியுறுத்தினர். விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வெள்ளியன்று (நவ.22) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பொன்னையா தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிக் சங்க மாவட்டச் செயலா ளர் கே.நேரு பேசுகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றாக இருக்கும்பொழுது 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 தடுப்பணைகள் கட்ட அரசாங்கம் முடிவு செய்தது.அதன்படி இரண்டு தடுப்பணைகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன. மீதமுள்ள ஐந்து தடுப்பணை களை விரைந்து கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2018 - 19ம் ஆண்டு காப்பீடு தொகை செலுத்திய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2015 - 16 ஆம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய தொகை 480 கோடி ரூபாயினை வழங்காமல் இருக்கின்றார்கள். 2018 - 19 ஆம் ஆண்டு அரசு அறிவித்த ஊக்கத் தொகையும் வழங்காமல் உள்ளனர். இவற்றை கணக்கிட்டு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில், விவசாய சங்க மாவட்டத் தலைவர் மோகனன், மாவட்ட பொருளாளர் சாரங்கன், மார்க்சிஸ்ட் கட்சியின் காஞ்சி ஒன்றிய செயலாளர் லாரன்ஸ், உத்தரமேரூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் மற்றும் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திர ளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.