அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, செந்தில்பாலாஜியை சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் கோரியும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென அவரது மனைவி மேகலா சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மேலும், ஆட்கொணர்வு மனு மீது அமலாக்கத்துறை பதில் மனுத் தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூன் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.