tamilnadu

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை: அமைச்சர்

சென்னை,ஜூலை 12- விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  இளைஞர் நலன் மற்றும் பள்ளி  கல்வித்துறை அமைச்சர் செங் கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் வெள்ளியன்று(ஜூலை 12) விளை யாட்டு போட்டிகளில் சாதிக்கும் வீரர்களுக்கு, பொதுத் துறை நிறு வனங்களில் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி, திமுக கொறடா சக்கரபாணி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசுகை யில்,“ விளையாட்டு வீரர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு களில் வழங்கப்பட்டு வரும், 3 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 10 விழுக்காடாக உயர்த்த வேண்டும் எனக் கூறினார். வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை வசம்  பயன்படுத்தப் படாமல் உள்ள இடங்களை மாணவர்கள் விளை யாட்டு மைதானங்களாக பயன்ப டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “விளையாட்டு  வீரர்களுக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்திருப்பதே, மிகப்பெரும் சாதனை எனவும், மேலும் வேலை வாய்ப்புகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 267 அரசு பள்ளிகளில், 5 ஏக்க ருக்கும் அதிகமாக இடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களை பயன்படுத்தி விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.