சென்னையில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்களின் பயன்பாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா பகுதிகள் உள்ளிட்ட 50 இடங்களில் இந்த குடிநீர் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். மக்கள் தங்கள் பாட்டில்களில் தண்ணீரை பிடித்துக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு 250 பேருக்கு குடிநீர் வழங்கும் திறன் கொண்ட டாங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.