திருப்பூர், ஜூலை 3 – விவசாயிகள் அனுமதி இல்லாமல் விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் அமைப்பது தொடர்பாக யாரும் நுழையக் கூடாது என்று காங்கேயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பொன்னாளிபாளையத்தில் பவர் கிரிட் நிறுவனத்தினர் விவசாய விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நிலம் அளவீடு செய்ய வந்த அலுவலர்களை விவசாயிகள் செவ்வா யன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை புதனன்று அரசியல் கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத் தினர். திமுக துணை பொதுச் செயலாளர் சுப்பு லட்சுமி ஜெகதீசன் மற்றும் பல அரசியல் கட்சியினர் வந்திருந்தனர். இதில் தாரா புரம் முதல் சத்தீஷ்கர் மாநிலம் ராய்கர் வரை அமைக்கப்படும் 800 கிலோ வோல்ட் மின் கோபுரம் அமைக்க அளவீடு செய்யப்பட்டுள்ள இடங்களையும், பாதிக்கப்படும் விவசாயிகளையும் சந்தித்து பேசினர். அதன்பின் அப்பகுதி விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மின் கோபுர பாதை அமைத்து விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லாமல் புதைவட கேபிள் வழியாக மின்சாரத்தை சாலைகளின் ஓரத்தில் கொண்டு செல்ல வேண்டும். விவசாயி களிடம் கருத்து கேட்பு கூட்டம் ஏதும் நடத்தாமல் அத்துமீறி விவசாயிகளின் அனுமதியின்றி அளவீடு செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மின்வழி அமைப்பதை கை விட வலியுறுத்தி விரைவில் மின் பாதை செல்லும் மாவட்டங்களில் உள்ள மக்களை ஒன்று திரட்டி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் எனவும், வரும் ஜூலை 8 ஆம் தேதியன்று உயர் மின்கோபுர விவசாயிகள், பெட்ரோல் பைப் லைன் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஒன்றிணைந்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தர கோருவது என்றும் முடிவு செய்திருப்பதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்தார்.