சென்னை, ஜூலை 18- ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரி கள் இயங்காததால் கல்வி நிறுவன வாகனங் கள் இயக்கவில்லை. இருப்பினும், கல்வி நிறு வன வாகனங்களுக்கான சாலை வரி, மோட் டார் வாகன வரி செலுத்தும்படி அரசு நிர்ப் பந்திக்கிறது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால் வாகனங்களுக்கான கட்டணங்களும் வசூ லிக்க முடியவில்லை. எனவே, சாலைவரி, மோட்டார் வாகன வரி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோவை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், கல்வி நிறுவன வாகனங்களுக்கான சாலைவரி, அபராதம் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது. வரி செலுத்தாக கல்லூரிகளுக்கு எதி ராக கடும் நடவடிக்கை கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேலும், வழக்கு குறித்து வரும் 22-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.