வேலூர், ஜூலை 13- வேலூர் மாவட்டம் வாணி யம்பாடி தாலுக்கா ஆலங் காயம் பேரூராட்சியில் உள்ள அம்பேத்கர் நகர், காமராஜ் நகர் பகுதியில் கடந்த மே மாதம் முதல் குடிநீர் விநி யோகம் செய்யப்பட வில்லை. இதுகுறித்து பேரூ ராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் கோப மடைந்த அந்த பகுதி மக்கள் ஆலங்காயம் - ஜமுனா மத்தூர் செல்லும் சாலை யில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: கிராமத்தில் உள்ள குடி நீர் மேல் நிலைத் தொட்டியை சரியான முறையில் பராம ரிப்பதில்லை, தெருவிளக்கு களை சம்பந்தப்பட்ட அதி காரிகள் கண்காணிப்ப தில்லை, கழிவுநீர் கால்வாய் களை சீர் செய்வதில்லை, சாலைகள் குண்டு குழியு மாக உள்ளன, விளையாட்டு மைதானம் இல்லை, ஊரில் உள்ள நிழற்குடை விழுந்து விடும் நிலையில் உள்ளது என்று கூறினர். தகவல் அறிந்து வந்த பேரூராட்சி அதிகாரி, குடிநீர் விநியோகம் செய்வதாக அளித்த உறுதி மொழியை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.