tamilnadu

img

நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்காதே

புதுச்சேரி, ஆக. 9- 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை தன்னாட்சி பொதுத்துறை ஊழியர்களுக்கும் அமல்படுத்தக் கோரி புதுச்சேரியில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்களுக்கு  உயர்த்தப்பட்ட 8 மாத நிலுவைத் தொகையையும், 1.7.2017 முதல் வீட்டு வாடைகைப் படி, போக்குவரத்துப் படி ஆகியவற்றை வழங்க வேண்டும், காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் பதவி உயர்வு மூலமும், நேரடி நியமனம் மூலமும் நிரப்ப வேண்டும், கலந்தாய்வு மூலம் தேவைப்படும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கவும், நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம்  செய்வதை கைவிட வேண்டும், நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும், தேசிய கல்விக்கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 33 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபை நோக்கி அரசு ஊழியர்கள், தன்னாட்சி நிறுவன ஊழியர்கள் சம்மேளனத்  தலைவர் பிரேமதாசன் தலைமையில் பேரணியாகச் சென்று தலைமை தபால்நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவுரவத்தலைவர் சி.எச்.பாலமோகனன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கீதா, கிறிஸ்டோபர், மோகனகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள்.