tamilnadu

img

உதவித்தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பெருந்திரள் தர்ணா போராட்டம்!

உதவித்தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பெருந்திரள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆந்திர அரசை போன்று தமிழ்நாட்டிலும் மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி இன்று சென்னையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் பெருந்திரள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய தலைவர் நம்புராஜன், சச்சிதானந்தம் எம்.பி, காங்கிரஸ் கட்சி தலைவர் கே.செல்வபெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.