போராட்டம் நடத்தியதற்காக சத்துணவு ஊழியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்ய பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை திரும்பபெறக் கோரி வெள்ளியன்று (ஆக.7) சைதாப்பேட்டை பனகல் மாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட, தென்சென்னை மாவட்டங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் சா.டானியல் ஜெய்சிங் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாவட்டச் செயலாளர்கள் அந்தோணிசாமி (வடசென்னை), ஆர்.வினோத் (தென்சென்னை) உள்ளிட்டோர் பேசினர்.