tamilnadu

மனம் திருந்திய 144 கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு கறவை மாடுகள்

ராணிப்பேட்டை, ஜூன் 29- மனம் திருந்திய கள்ளச்சாராய வியா பாரிகள் 144 பேருக்கு 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா கறவை மாடு கள் வழங்கப்பட்டன.  ராணிப்பேட்டை மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் சாராயம் விற்பனை செய்து வந்த பலர் அந்த தொழிலைக் கைவிட்டுள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு சார்பில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  43 லட்ச ரூபாய் மதிப்பிலான கறவை மாடுகளை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.  எல்லைப்பகுதிகளில் உள்ள கிராமங்க ளில் வசித்துவரும் பொதுமக்கள் சாராயம்  காய்ச்சி விற்பனை செய்யும் தொழிலில்  ஈடுபட்டு வந்தனர். மாவட்ட கண்காணிப்பா ளரின் தொடர் நடவடிக்கையால் அவர்கள் தாமாக முன்வந்து அந்த தொழிலைக் கைவிட்  டதைத் தொடர்ந்து அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் 43 லட்சம்  மதிப்பிலான கறவை மாடுகள் வழங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.