tamilnadu

img

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எழுச்சியோடு நடைபெற்ற சிபிஎம் பிரச்சார இயக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எழுச்சியோடு நடைபெற்ற சிபிஎம் பிரச்சார இயக்கம்

கள்ளக்குறிச்சி,ஜூன் 22– கள்ளக்குறிச்சி மாவட்  டத்தில் பல்வேறு ஒன்றி யங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கிளர்ச்சி பிரச்சாரம் மிகுந்த எழுச்சியோடு நடை பெற்றது.  கிராமங்கள் தோறும் மக்களை சந்தித்து ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகள் அம்பலப்படுத்தப்பட்டது. 100 நாள் வேலை திட்ட த்திற்கு போதிய நிதி ஒதுக்கவேண்டும், நிலு வையில் உள்ள நிதியை ஒன்றிய அரசு  விடுவிக்க வேண்டும்,  மாநில அரசு நிறைவேற்ற வேண்டிய வீட்டுமனைப் பட்டா, மாதந்தோறும் மின்கணக்   கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த இயக்கத்தில் வலியுறுத்தப் பட்டது. மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பிரச்சாரக் குழுக்கள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான கிரா மங்களுக்கு சென்று விவசாய கூலித் தொழி லாளர்கள் மற்றும் எளிய மக்களை சந்தித்து கிளர்ச்சி பிரச்சாரத்தின் நோக்கத்தை விளக்கும் துண்டு பிரசுரங்கள் விநி யோகிக்கப்பட்டது.  தெரு முனை பிரச்சாரங்களும் நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட ஒன்றிய தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினர். சங்கராபுரம்  சங்கராபுரம் ஒன்றி யத்தில் ஒன்றிய செய லாளர் எம்.சிவாஜி தலை மையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி கலந்து கொண்டார். சங்கராபுரம் பேருந்து நிலை யம் முக்கிய கடைவீதிகள் மும்முனை சந்திப்பு ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து பிரச்சார இயக்கத்தின் நோக்கங்களை அவர் விளக்கினார். சுகந்தி பேசுகை யில்  கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு வரி சலுகைகளை வாரி வழங்கும் அரசாக மோடி அரசு செயல் படுகிறது என்றார். தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் மக்களுக்கு எதிரான திட்டங்கள் வரும்போது எல்லாம் சமரசம் இன்றி பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். சாதிய ஆணவ படு கொலைக்கு எதிராக  தமிழகத்தில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தினார். இந்த கூட்டத்தில்  மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட குழு உறுப்பினர் வி.ஏழுமலை உள்ளிட்ட பலர் பேசினர். திருநாவலூர்  களமருதூர் கடை வீதியில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு ஒன்றிய செயலாளர் கே. ஆனந்தராஜ், தலைமை தாங்கினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.செந்தில் களமருதூர் பகுதியில் புறக்காவல் நிலையத்தை உடனே அமைக்க வேண்டும், அரசி னர் மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதில் கிளைச் செயலா ளர்கள் சக்திவேல், வேலு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். உளுந்தூர்பேட்டை உளுந்தூர்பேட்டை எடைக்கல் பகுதியில் ஒன்றிய செயலாளர் வேலா.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இயக்கத்தில்  குடிமனை பட்டா கேட்டு காத்திருக்கும் தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் பஞ்சமி நிலத்தை மீட்டு உரிய நபர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது.  இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.கே.பழனி,மாவட்ட குழு எம்.ஆறுமுகம்,ஆர்.சீனிவாசன், ஏ.ரீட்டா ஆகி யோர் பேசினார். ரிஷிவந்தியம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க நடைபயணத்திற்கு ஒன்றிய செயலாளர் பழனி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசி னார். ரிஷிவந்தியம் கூட்டுச் சாலை, அர்த்தநாரீஸ்வரர் கோவில் தெரு,முக்கிய தெருக்களின் வழியாக வாகன பிரச்சாரம் நடை பெற்றது. திருக்கோவிலூர் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் எதிரில் மக்கள் சந்திப்பு பிரச்சார கூட்டத்தின் ஒரு பகுதியாக வாகனம் மூலம் பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநி யோகம் செய்யப்பட்ட பிறகு கூட்டத்தை விளக்கி பேசி னர்.  நகரச் செயலாளர் பழனி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கே.பூவராகவன் மாவட்டக் குழு உறுப்பினர் டி.எஸ்.மோகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். சின்னசேலம் சின்னசேலத்தில் பேருந்து நிலையம், செங்குந்தர் வீதி,மற்றும் நகர முக்கிய வீதிகளின் வழியாக வாகன பிரச்சாரம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுப்பிரமணியன், மு.சிவ குமார் ஆகியோர் பேசினர். திருநாவலூர் திருநாவலூர் கிழக்கு ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது. திருநாவலூர் மும்முனை சந்திப்பில் நடைபெற்ற  பிரச்சாரக் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜெ. ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.  இதில் கட்சி யின்  மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.அலமேலு உள்பட பலர் பேசினர்.