சென்னை:
தமிழகத்தில் கொரோ பரவல் உச்சத்தை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டது. குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்படுவதுதான் அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 121. இதையடுத்து மொத்த எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது.
செவ்வாயன்று 7,093 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன. மொத்த சாம்பிள்கள் சோதனை 1,01,874. நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்த மட்டில் 93,189 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. 41 இடங்களில் தொற்று ஆய்வகங்கள் உள்ளன. வீட்டுக் கண்காணிப்பில் 30,692 பேர் உள்ளனர். அரசுக் கண்காணிப்பில் 47 பேர் உள்ளனர். செவ்வாயன்று 27 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,128 பேர் குணமடைந்துள்ளனர். செவ்வாயன்று ஒருவர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகபட்சமாக சென்னையில் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த எண்ணிக்கை 673 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த எண்ணிக்கை ஒன்பதாக ஆக அதிகரித்துள்ளது. நாமக்கல்லில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒரு வயது முதல் 12 வயது வரையிலானவர்கள் 121 பேர். இதில் பெண்கள் 65 பேர். ஆண்கள் 56 பேர். 13 வயது முதல் 60 வரையில பாதிக்கப்பட்டவர்கள் 1,697 பேர். பெண்கள் 1,160 பேர். ஆண்கள் 537 பேர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 240 பேர். பெண்கள் 168 பேர். ஆண்கள் 72 பேர்.
செவ்வாயன்று பாதிக்கப்பட்டவர்களில் செங்கல்பட்டில் பிறந்த ஐந்து நாளே ஆன பச்சிளங்குழந்தையும் அடங்கும். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு வயது, இரண்டு வயது, ஒன்பது வயது குழந்தைகள் நான்கு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 வயது வரைக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி 121-ஐ தொட்டுவிட்டு. இது அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. ஈரோட்டில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழக அரசு செவ்வாயன்று அளித்துள்ள வரைபடத்தில் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களே மிக மிக அதிகமாக உள்ளன.