விழுப்புரம், செப்.10- விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம்,மயிலம் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட பொம்பூர் கிராமத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் அம்மன்கோவில் திருவிழா நடந்தது. சாமி வீதி உலா ஊர்வலம் முடிவில் ஆதிக்க பிரிவு மக்கள் வசிக்கும் பகுதியான மந்தை வெளி பகுதி வரை சென்று திரும்புவது வழக்கம். சம்பவத்தன்று இரவு சுமார் 10 மணிக்கு சாமி வீதி உலா வந்தபோது பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது ஆதிக்க பிரிவினர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரு பிரி வினருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு, கல்வீசியும், ஆயு தங்கள் கொண்டும் ஒரு வரை ஒருவர் தாக்கி;க கொண்டுள்ளனர். இதில் காயமடைந்த தலித் மக்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத னைத் தொடர்ந்து, ஒரு பிரி வினர் அருகிலிருந்த கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்த தால் எரிந்து நாசமானது.
இந்த சம்பவத்தின்போது மயிலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சையத் முகமது அலிக்கு தீக்காயம் ஏற்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார் சம்பவ இடத்திற்கு நள்ளிரவில் வந்து விசாரணை செய்தார். இதனால் ஆண்கள் பலரும் தலைமறைவாக உள்ளனர். கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப் பட்டுள்ளது. மேலும் தலித் பகுதியில் 8 பேர் மீது ஆதிக்க பிரிவி னர் ஒருவர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், தலித் தரப்பிலிருந்து 15 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனை யடுத்து வானூர் வட்டாட்சி யர் தலைமையில் வரு வாய் துறையினர் பிரச்ச னைக்குரிய கோயிலை பூட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் மீண்டும் பதட்டமான சூழ்நிலை ஏற் பட்டது,இதனை தொடர்ந்து மீண்டும் கோயில் திறக்கப்பட்டது. சம்பவம் நடந்த அப்பகுதி யில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் இரு தரப்பி னரையும் அழைத்து சமா தான பேச்சுவார்த்தை நடத்தி அக்கிராமத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டு கோள்விடுத்துள்ளது.