சென்னையில், தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலியாகியுள்ளார்.
சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சென்னை மாங்காடு பகுதியில், தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி (42), மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்து பலியானார். பள்ளத்தை சுற்றி எந்த தடுப்பும் அமைக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்தவரின் உடலை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே, கடந்த மாதம் சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த முத்துகிருஷ்ணன் (25), மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.