tamilnadu

img

மெட்ரோ பாலம் கட்டுமான பணியின்போது விபத்து - உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலம் கட்டுமான பணியின்போது, கான்கிரீட் விழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் பாலம் கட்டுமான பணியின்போது நேற்று இரவு இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 20 அடி உயரத்தில் இருந்து இணைப்பு பாலம்  சரிந்து விழுந்ததில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். இந்த சூழலில், விழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.