கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரை மிகவும் அவசியம்
சென்னை,ஜூன் 24- குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிடும் தாய்மார்கள் அதற்கு பல மாதங்களுக்கு முன்பே இரும்புச் சத்து மாத்திரை களை உட்கொள்வது அவசி யம் என்றும் இதனால் குழந்தைகள் எந்தவித குறைபாடும் இல்லாமல் பிறப்பது உறுதிசெய்யப்படு கிறது என்றும் காவேரி மருத்துவமனையின் தண்டு வடம் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சையில் மூத்த நிபுணர் மருத்துவர் ஜி.பாலாஜி கூறினார். பச்சிளம் குழந்தைக ளுக்கு பிறவியிலேயே ஏற்படும் மூளை மற்றும் முதுகுத்தண்டு பிரச்சனைக ளுக்கு சிகிச்சையளிக்கும் தளிர்கள் திட்டத்தை வட சென்னை ரோட்டரி சங்கம், தமிழக அரசுடன் இணைந்து காவேரி மருத்துவமனை துவக்கியுள்ளது. பிறவிலேயே குறைபாடுகளு டன் பிறக்கும் குழந்தைக ளின் வாழ்வில் ஒளியூட்டும் வகையில் தொடங்கப்பட்டு ள்ள இந்த திட்டம் வரு மானத்தில் பின்தங்கிய ஏழை ஏளிய குடும்பங்களுக்கு பெரிதும் உதவும் என்று அவர் கூறினார். மருத்துவர் பாலாஜி மேலும் கூறுகையில் வெளிநாடுகளில் இரும்புச் சத்து மாத்திரையை ரொட்டி, அரிசி, மற்றும் இதர தானியங்களில் கலந்து உணவுப்பொருட்களை தயாரித்து பெண்களுக்கு தருகிறார்கள். இரும்புசத்து குறைபாட்டால் குழந்தை கள்,பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார். கர்ப்பிணி தாய்மார்கள் 20 வாரத்தில் ஸ்கேன் செய்து பார்க்கும் போது குழந்தை நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்ய முடியும். மேலும் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை சரி செய்யமுடியும் என்றால் அதற்கு முயற்சிக்கலாம். இல்லை அக்குழந்தை மன வளர்ச்சி குறைபாட்டுடன் பிறக்கும் என்றால் அடுத்து என்ன செய்யலாம் என்பதை அப்போது முடிவு செய்து கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு
பூந்தமல்லி, ஜூன் 24- பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம், பாணவேடு தோட்டம், பிடாரிதாங்கல் பகுதிக ளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் ஜெனரேட்டர் வசதியுடன் தண்ணீர் திருட்டு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிறன்று இரவு ஏராளமான லாரிகள் தண்ணீர் ஏற்றுவதற்காக அங்கு வந்தன. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தண்ணீர் ஏற்றிச் சென்ற லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த பூந்தமல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி னர். அப்போது இந்த பகுதியில் லாரிகளில் தண்ணீர் எடுக்க தடை விதித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தப் போராட்டம் குறித்து பொது மக்கள் கூறுகையில் ‘எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது 60 அடியில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்ட இடத்தில் தற்போது 300 அடி முதல் 600 அடி வரை ஆழ்துளைகுழாய் கிணறுகள் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இங்கு போர்வெல்கள் அமைத்து நூற்றுக்கண க்கான லாரிகளில் தண்ணீர் திருடி எடுத்து செல்லப்படுகிறது. இதனால் எங்கள் பகுதி யில் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு ள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் போராட்டங்களில் ஈடுபடுவோம்’ என்றனர்.