புதுச்சேரி வெங்கட்டா நகரில் உள்ள புதுவை தமிழ்ச் சங்க வளாகத்தில் நடந்த விழாவில் திருவள்ளுவர் சிலையை முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார். சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜகான், தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து, புதுச்சேரி தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் திரளானோர் பங்கேற்றனர்.