மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஜன.8 பொதுவேலைநிறுத்தத்தை விளக்கி சென்னை மற்றும் புறநகர் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சூளைப்பள்ளத்தில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநில துணைப்பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் பேசினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா,பாலகிருஷ்ணன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் எம்.பாண்டியன், விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் ஏ,நடராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.