சென்னையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்குப் பதக்கங்களை வழங்கத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. திரு. க. வெங்கடராமன், இ.கா.ப., கூடுதல் காவல் துறை இயக்குநர். குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
2. திரு அஸ்ரா கர்க், இ.கா.ப., காவல்துறைத் தலைவர்/கூடுதல் காவல் ஆணையாளர். சட்டம் மற்றும் ஒழுங்கு (வடக்கு), சென்னை பெருநகர காவல்.
3 திரு. சு. ராஜேந்திரன், இ.கா.பா., காவல்துறை துணைத் தலைவர், குற்றப்புலனாய்வுத் துறை நுண்ணறிவு, சென்னை.
4. திருமதி. ப.ஹீ. ஷாஜிதா. காவல் கூடுதல் துணை ஆணையாளர், இணையவழி குற்றப் பிரிவு, சென்னை பெருநகர காவல்.
திரு. ஹா. கிருஷ்ணமூர்த்தி, காவல் துணைக் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
6. திரு. வே. அனில்குமார், காவல் உதவி ஆணையர், கொங்கு நகர் சரகம், திருப்பூர் மாநகரம்.
7. திரு. கோ. சரவணன், காவல் துணைக் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, மதுரை சரகம்.
8 திரு. ர. மாதையன், காவல் ஆய்வாளர், சூலூர் காவல் நிலையம், கோயம்புத்தூர் மாவட்டம். 9. திருமதி. மா. அமுதா, காவல் ஆய்வாளர், பீளமேடு காவல் நிலையம், கோயம்புத்தூர் மாநகரம்.
10. திருமதி. ம. அனிதா, காவல் ஆய்வாளர், மாசார்பட்டி காவல் நிலையம், தூத்துக்குடி மாவட்டம்.
11. திருமதி. இரா. விஜயா, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.
12 திருமதி. ஆ. மகாலெட்சுமி, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், அரியலூர் மாவட்டம்.
13. திருமதி. அ.சித்திராதேவி, காவல் ஆய்வாளர், இணையக் குற்றப்பிரிவு, திருப்பூர் மாவட்டம்.
14 திருமதி. ந. மணிமேகலை, காவல் ஆய்வாளர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சென்னை பெருநகர காவல்.
15. மறைந்த காவல் ஆய்வாளர் கு. சிவா, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, திருச்சிராப்பள்ளி.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25,000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் எனத் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.