மாதா மாதம் மின் கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்துக ஆவடி மாதர் சங்க மாநாடு வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 21- மாதா மாதம் மின் கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என மாதர் சங்க மாநாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஆவடி பகுதி 17ஆவது மாநாடு காமராஜ் நகரில் தோழர்கள் மைதிலி சிவராமன், பிருந்தா நினைவரங்கில் சனிக்கிழமை (ஜூன் 21) நடைபெற்றது. எஸ்.லதா, புனித உதயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். டி.விமலா கொடி ஏற்றினார். டி.வாசுகி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். 41ஆவது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் பா.விமலா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் எம்.பேச்சியம்மாள் வேலை அறிக்கையையும், பொருளாளர் வி.புவனேஸ்வரி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். வி.லதா (நலம் விரும்பும் அறக்கட்டளை), யு.அனுநிதா (இலவச சட்ட ஆலோசனை மையம்), மேகலா சீனிவாசன் (ஆவடி 38ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர்), வி.பி.ஷீலா (யோகா மாஸ்டர்) ஆகியோர் வாழ்த்திப் பேசினார். மாவட்டத் தலைவர் எம்.கோட்டீஸ்வரி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக வி.பாரதி வரவேற்றார். வெண்ணிலா நன்றி கூறினார். தீர்மானங்கள் வட்டத்திற்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், அரிசி மீது போடப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும், பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு காரணமான டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், இ பஸ்களை தனியாரிடம் வழங்கி இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மாதா மாதம் மின் கணக்கிடும் முறையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தலைவராக எம்.பேச்சியம்மாள், செயலாளராக வி.பாரதி, பொருளாளராக வி.புவனேஸ்வரி உள்ளிட்டு 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மிக மெல்லிய ஸ்மார்ட்போன்
சென்னை, ஜூன் 21- விவோ நிறுவனம் ஒய் 400 ப்ரோ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. முன் மற்றும் பின்புற கேமரா இரண்டிலும் 4கே வீடியோ பதிவுடன் கூடிய பிரிவின் மிக மெல்லிய 3டி வளைந்த டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் ஆகும். போர்ட்ரெய்ட், முன் மற்றும் பின்புற கேமரா இரண்டிலும் 4K வீடியோ பதிவு திறன்கள் உள்ளிட்ட பல முதன்மை அம்சங்களை வழங்குகிறது. தனித்துவமான பல அம்சங்கள் இதில் உள்ளதாக விவோ நிறுவனம் கூறியுள்ளது. 2 மாதங்களுக்கு 10 ஓடிடி செயலிகளுக்கான இலவச பிரீமியம் அணுகல் உள்ளிட்ட சலுகைகளும் இதோடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுத்தொழில் ஊடக கண்காட்சி
சென்னை, ஜூன் 21- இந்தியாவின் பிரிண்ட் மற்றும் விளம்பரத் துறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வு களுக்காக, பிரிண்ட் எக்ஸ்போ சென்னை மற்றும் மீடியா எக்ஸ்போ சென்னையின் முதல் பதிப்பானது வருகிற ஜூலை 10 ஆம்தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடை பெறவுள்ளது, 175க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இயந்தி ரங்கள் சாதனங்கள் காட்சிப் படுத்தப்பட வுள்ளன. அச்சு கண்காட்சியில் சமீபத்திய ஆஃப்செட் மற்றும் டிஜிட்டல் பிரிண்டிங் இயந்திரங்கள், உயர் செயல்திறன் கொண்ட இன்க்ஜெட் மற்றும் லேசர் தொழில்நுட்பங்கள் இடம் பெறவுள்ளன என்று மெஸ்ஸி பிராங்பேர்ட் ஆசியா ஹோல்டிங்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜ் மானெக் கூறியுள்ளார். சென்னை, ஜூன் 21- இந்தியாவின் பிரிண்ட் மற்றும் விளம்பரத் துறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வு களுக்காக, பிரிண்ட் எக்ஸ்போ சென்னை மற்றும் மீடியா எக்ஸ்போ சென்னையின் முதல் பதிப்பானது வருகிற ஜூலை 10 ஆம்தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடை பெறவுள்ளது, 175க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இயந்தி ரங்கள் சாதனங்கள் காட்சிப் படுத்தப்பட வுள்ளன. அச்சு கண்காட்சியில் சமீபத்திய ஆஃப்செட் மற்றும் டிஜிட்டல் பிரிண்டிங் இயந்திரங்கள், உயர் செயல்திறன் கொண்ட இன்க்ஜெட் மற்றும் லேசர் தொழில்நுட்பங்கள் இடம் பெறவுள்ளன என்று மெஸ்ஸி பிராங்பேர்ட் ஆசியா ஹோல்டிங்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜ் மானெக் கூறியுள்ளார்.