tamilnadu

img

தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு தில்லியில் அனைத்துக் கட்சிகள் திரண்டு புகழஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு புதுதில்லி தல்கடோரா உள்விளையாட்டு அரங்கில் சனிக்கிழமையன்று மாலை புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் அஞ்சலி தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றினார். தொடர்ந்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடனான தங்களின் நினைவுகளை பகிர்ந்து, அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், காஷ்மீர் முன்னாள் முதல்வர் டாக்டர் பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி), திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் கனிமொழி (திமுக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் து. ராஜா, சிபிஐ(எம்எல்) லிபரேசன் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தில்லி அமைச்சர் கோபால் ராய், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் மனோஜ் கே ஜா,  சமாஜ்வாதி கட்சி பொதுச்செயலாளர் ராம்கோபால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. மகுவா மாஜி, பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக், ‘தி இந்து’ பத்திரிகை முன்னாள் முதன்மை ஆசிரியர் என். ராம், சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.