tamilnadu

img

கொரோனா சிகிச்சை கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை...

சென்னை:
கொரோனா சிகிச்சை கட்டண விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்றும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் தனியார் மருத்துவ மனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள் ளப்படும் ஆரம்பக்கட்ட பரிசோதனை முதல் குணமடைந்து வீடு திரும்பும் போது நடத்தப்படும் சோதனை வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.  மேலும் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை கட்டண விவரங்கள்பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவேண்டும் என்று தனியார் மருத்துவ மனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் டிவிட்டர் பதிவில், கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால்அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். மேலும் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரி வித்துள்ளார்.